• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை – ஆட்சியர் அறிவிப்பு

December 28, 2020 தண்டோரா குழு

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு, மனமகிழ் மன்றங்கள், விமானநிலைய உணவகங்கள், தமிழ்நாடு ஓட்டல், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட மதுபான உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுக்கூடங்கள் வருகிற 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்களை விற்பனை செய்தல் மற்றும் மதுக்கூடங்கள் செயல்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க