• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை – ஆட்சியர் அறிவிப்பு

December 28, 2020 தண்டோரா குழு

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு, மனமகிழ் மன்றங்கள், விமானநிலைய உணவகங்கள், தமிழ்நாடு ஓட்டல், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட மதுபான உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுக்கூடங்கள் வருகிற 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்களை விற்பனை செய்தல் மற்றும் மதுக்கூடங்கள் செயல்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க