• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாளையாறில் லாட்டரி கடைக்குள் புகுந்த கண்டைனர் லாரியால் பரபரப்பு

December 26, 2020 தண்டோரா குழு

கோவை – கேரள எல்லையான வாளையாறு அருகே சாலையில் சென்ற கண்டைனர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாட்டரி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை – கேரள எல்லையான வாளையறு வழியாக பாலக்காடு நோக்கிச் கண்டைனர் லாரி நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது வாளையாறு சோதனைச்சாவடியை தாண்டி சென்ற போது லாரி ஓட்டுநர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி சாலை ஓரத்தில் நின்றிழந்த இரு சக்கர வானத்தில் மோதி அங்கிருந்த இருந்த லாட்டரி கடைக்கு புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் மயிரிழையில் சாலை ஓரத்தில் இருந்த இரண்டு பேர் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.
மேலும் லாரி நியுட்டரில் விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், ஓட்டுநர் ஹேண்டு பிரேக் பிடிக்காத்தால் விபத்து நிகழ்ந்ததாக வாளையறு போலீஸார் தெரிவித்தனர்.ஆனாலும் அதிஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பியதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க