• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட கார், சிறுவாணி சாலையில் மீட்பு.

December 26, 2020 தண்டோரா குழு

கோவையில் கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட கார், சிறுவாணி சாலையில் மீட்கப்பட்டுள்ளது.

கோவை நவக்கரை அருகே கேரள ரியல் எஸ்டேட் அதிபர் அப்துல் சலாம் என்பவர் வந்த காரை மறித்து, இரண்டு காரில் வந்த மர்ம கும்பல் ரூ.27 லட்சம் பணம்,காரை நேற்று கொள்ளையடித்து சென்றது.சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள எல்லையான நவக்கரையில் திருடப்பட்ட கார்,நேற்று நள்ளிரவில் சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களுடன் ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க