• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிணத்துக்கடவில் மாவட்ட அதிரடி ஆய்வு

December 24, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாங்கிபாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி, தேவனாம்பாளையம், காளியண்னம்பாளையம், கக்கடவு மற்றும் சூலக்கல் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை மாவட்டஆட்சியர் ராஜாமணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கோடாங்கிபாளையம் ஊராட்சியில் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணிகள், செட்டிக்காபாளையம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட பணிகள், கோதவாடி ஊராட்சியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 3.25 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணிகள், தேவனாம்பாளையம் ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தனியார் தோட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மண்வரப்பு அமைக்கப்பட்டு வரும் பணிகள் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட கலெக்டர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க