• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு வீடாக பரப்புரை – ஆர்.எஸ்.பாரதி

December 24, 2020 தண்டோரா குழு

அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக, கோவை மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

கோவை மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் தி.மு.க.சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகம் முழுவதும், தலைவர் தளபதியின் அறிவிப்பிற்கு ஏற்ப வரும் ஜனவரி 10 ந்தேதி வரை திமுக சார்பில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், அராஜக ஆட்சி, ஊழல் ஆட்சி, குறிப்பாக இங்கு உள்ள வேலுமணியின் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருகிறோம். அவர்களின் குற்றசாட்டுகளை ஆளுநரிடன் தளபதி தலைமையில் அளித்துள்ளோம். இதனை மக்களிடம் விளக்கும் வகையில் கிராம சபைகள் நடைபெறுகிறது.அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டுமென திமுக இறங்கியுள்ளதுவரலாறு காணாத எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம் தெரிகிறது என்று கூறினார்.

தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில், அ.து.மு.கவை நிராகரிக்கிறோம் எனும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மதுக்கரை ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் MRR .பிரகாஷ்,மாவட்ட கஙுன்சிலர் ராஜன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் ராஜசேகர்,கதிரேஷ்குமார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க