• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மீன்வளர்ப்பு கடையில் வைக்கப்பட்டிருந்த யானைகள் தந்தம் பறிமுதல்

December 23, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சாலையில் சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன்வளர்ப்பு கடையில் யானையின் தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றத்தடுப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின் பெயரில் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு குழுவினருடன் மீன்வளர்ப்பு கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானையின் இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்தனர் .விசாரணையில் கடையின் உரிமையாளர் உட்பட 6 பேர் இந்த தந்தங்களை விற்க முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஆறு நபர்களையும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க