• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி 5 சதவீதமாக குறைக்க வேண்டும் -காட்மா வலியுறுத்தல்

December 23, 2020

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர்கள் சங்கம் (காட்மா) பொதுக்குழு கூட்டம் பீளமேடு பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் காட்மா தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் காட்மா தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் மூடப்பட்டுள்ள செயில் கிடங்கை மீண்டும் திறக்க வேண்டும்.அதன் மூலம் மூலப்பொருட்களை தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் கோவையில் மூலப்பொருள் வங்கி அமைத்து நியாயமான விலையில் மூலப்பொருட்களை வழங்க வேண்டும்.

ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். கோவை அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்து தர வேண்டும். இதுவரை வங்கிகளில் கடன் பெறாத தொழில்முனைவோர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் முத்ரா திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்க வேண்டும். குறுந்தொழில் முனைவோர்களுக்கு காப்பீட்டு திட்டம், ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு, ஒய்வுக்கு பின் ஒய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

மேலும் படிக்க