• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடைநீக்கம்

December 18, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகராக பணி புரிந்து வந்தவர் ஆரோக்கியசாமி. இவர்,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பந்தபாறை பகுதியில், தனது மனைவி பெயரில் தோட்டம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,இவரது தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில்,நேற்று தோட்டத்தில் உள்ள அறைகளை சோதனை செய்ததில், அவரது தோட்டத்தில் 380 கிலோ சந்தன மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில்,இன்று போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க