• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவு

December 16, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் 900 முதல் 1000 டன் குப்பைகள் சேர்க்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செலப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம் வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு வரும் குப்பைகளின் அளவு குறைக்கப்படும். தற்போது இதில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

‘‘இதுவரை 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.அதில் 5க்கும் மேற்பட்ட மையங்களில் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது,’’ என்றனர்.

மேலும் படிக்க