• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவு

December 16, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் 900 முதல் 1000 டன் குப்பைகள் சேர்க்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செலப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம் வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு வரும் குப்பைகளின் அளவு குறைக்கப்படும். தற்போது இதில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

‘‘இதுவரை 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.அதில் 5க்கும் மேற்பட்ட மையங்களில் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது,’’ என்றனர்.

மேலும் படிக்க