• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனுமதியின்றி செயல்படும் வார சந்தைகளை வரைமுறைப்படுத்த கோரிக்கை

December 14, 2020 தண்டோரா குழு

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பீளமேடு, விலாங்குறிச்சி, காந்திமாநகர், பீளமேடு புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொது இடத்தில் வார சந்தைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.

இதுகுறித்து ம.தி.மு.க. பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி கூறுகையில்,

” திங்கள் முதல் வியாழன் வரை இந்த இடங்களில் வார சந்தைகள் அனுமதியின்றி நடத்தப்படுகிறது. வார சந்தைகள் பொது இடங்களில் நடத்தப்படும் போது அரசு அதிகாரிகள் சுங்கம் வசூல் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும், வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். சுமார் ரூ. 25 ஆயிரம் வரை ஒரு சந்தைக்கு சுங்கம் வசூல் செய்ய முடியும். அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வார சந்தைகளை வரைமுறைப்படுத்த வேண்டும்,” என்றார்.

மேலும் படிக்க