• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனுமதியின்றி செயல்படும் வார சந்தைகளை வரைமுறைப்படுத்த கோரிக்கை

December 14, 2020 தண்டோரா குழு

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பீளமேடு, விலாங்குறிச்சி, காந்திமாநகர், பீளமேடு புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொது இடத்தில் வார சந்தைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.

இதுகுறித்து ம.தி.மு.க. பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி கூறுகையில்,

” திங்கள் முதல் வியாழன் வரை இந்த இடங்களில் வார சந்தைகள் அனுமதியின்றி நடத்தப்படுகிறது. வார சந்தைகள் பொது இடங்களில் நடத்தப்படும் போது அரசு அதிகாரிகள் சுங்கம் வசூல் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும், வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். சுமார் ரூ. 25 ஆயிரம் வரை ஒரு சந்தைக்கு சுங்கம் வசூல் செய்ய முடியும். அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வார சந்தைகளை வரைமுறைப்படுத்த வேண்டும்,” என்றார்.

மேலும் படிக்க