• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதிய ரீதியாக மிரட்டிய அதிமுக துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 14, 2020 தண்டோரா குழு

பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவரை சாதிய ரீதியாக மிரட்டி பணி செய்ய விடாமல் தடுக்கும் அதிமுக துணைத்தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் 700 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த ஊராட்சி தேர்தலில் இப்பகுதி பழங்குடியின வேட்பாளருக்காக ஒதுக்கப்பட்டு சுந்தரி தங்கவேலு என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரியையும், அவரது கணவர் மற்றும் மகனையும் ஆதிக்க சாதியை சார்ந்த துணைத்தலைவர் கிருஷ்ணன் மிரட்டுவதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.

இதனைத்தொடர்ந்து சுந்தரி தங்கவேலு பேசும்போது,

சாதிய ரீதியாக துணைத்தலைவர் கிருஷ்ணன் செயல்படுவதாகவும், எந்த பணி செய்தாலும் தன்னிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் அவருடன் சேர்ந்து இரு உறுப்பினர்கள் ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்தார்.

அதிமுகவைச்சேர்ந்த துணைத்தலைவர் கிருஷ்ணன் அவருடைய நிர்வாகத்தின் கீழ்தான் ஊராட்சி மன்றம் செயல்பட வேண்டுமெனவும், உயர் சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் சொல்வதை கேட்டுத்தான் நடக்க வேண்டும் என மிரட்டப்படுவதாகவும் தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவராக சுதந்திரமாக செயல்பட பெண் துணைத்தலைவரை நியமிக்கக்கோரியும், துணைத்தலைவர் கிருஷ்ணன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும் படிக்க