• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு

December 12, 2020 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.அப்போது அப்பகுதியில் காய்கறி ஏற்றிசெல்ல வரும் வாகனங்களின் விவரம், வாகனங்கள் உள்ளே வரும் நேரம் மற்றும் வெளியே செல்லும் நேரங்கள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார். பின்னர், குறிப்பிட்ட நேரங்களுக்கு மேல் வாகனங்களை உள்ளே நிறுத்தக்கூடாது, மார்க்கெட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், காய்கறிக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது என மாநகராட்சி கமிஷனர் வியாபாரிகளிடம் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகள் வெளியே நின்று செல்வதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் பேருந்து நிலையத்திற்குள் இயங்கி வந்த வெங்காய மார்க்கெட்டை, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை ஒட்டியுள்ள வடக்கு பகுதியிலுள்ள காலி மைதானத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி திட்டம்) சரவணக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்

மேலும் படிக்க