• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதல் இடத்தை பிடித்த நிர்மல் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு

December 9, 2020 தண்டோரா குழு

நாக்பூரில் நடைபெற்ற உலக அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்ற கோவையை சேர்ந்த நிர்மல் நாகேந்திரனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உலக அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது இதில் ரஷ்யா ஜப்பான் இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற 21 வயதுடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்மல் நாகேந்திரன், தனது திறமையின் மூலம் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த நிர்மல் நாகேந்திரனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் என பலரும் பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளரும் பேசிய நிர்மல் தனது கடுமையான பயிற்சியின் மூலம் இந்த வெற்றியை பெற்றுள்ளதாக கூறினார். 250 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பது தனக்கும், தன் பெற்றோருக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க