• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

December 9, 2020 தண்டோரா குழு

சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், சரவணன் மீனாட்சி என்ற தொடரில்முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா, இன்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவின் மறைவு செய்தி கேட்ட ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க