• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

December 5, 2020 தண்டோரா குழு

பாபரி மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ரயில் மற்றும் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

பாபரி மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6 நாளை அனுசரிக்கப்படுகிறது எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஆயிரம் போலீசாரும் மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின்பேரில் மாவட்ட பகுதிகளில் 1200 போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.ரயில் நிலைய வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்ட கண்காணிக்கப்படுகிறது பயணிகள் தவிர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க