• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

December 5, 2020 தண்டோரா குழு

பாபரி மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ரயில் மற்றும் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

பாபரி மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6 நாளை அனுசரிக்கப்படுகிறது எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஆயிரம் போலீசாரும் மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின்பேரில் மாவட்ட பகுதிகளில் 1200 போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.ரயில் நிலைய வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்ட கண்காணிக்கப்படுகிறது பயணிகள் தவிர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க