• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி கல்லூரி மாணவருக்கு யுனெஸ்கோ அமைப்பின் “க்ரீன் ஃபின் விருது

December 5, 2020 தண்டோரா குழு

பி. எஸ். ஜி. ஹைடெக் கல்லூரி மாணவருக்கு யுனெஸ்கோ அமைப்பின் “க்ரீன் ஃபின் 2020 ம் ஆண்டிற்கான அங்கீகாரம்” கோவை நீலாம்பூர் இல் அமைந்துள்ள பி.எஸ்.ஜி.ஹைடெக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பி. இ. சிவில் இன்ஜினியரிங் மாணவர் திரு. ஜி. யோகபாலாஜிக்கு சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ வின் மாணவர்களுக்கான பெருமைக்குரிய “க்ரீன் ஃபின் 2020 அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் யுனெஸ்கோ நடத்திய “காலநிலை மெய்மை செயல்திட்டம் ” என்னும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டார். மேலும் மதுரை மற்றும் கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு காலநிலை மாற்றங்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.மத்திய அரசின் மனிதவளம் மற்றும் மேம்பாடு அமைச்சரகம் இவரின் சமூக பங்களிப்பினை பாராட்டி “சமதான்” செயல் திட்டத்தில் உறுப்பினராக நியமித்தது. ஜி. யோகபாலாஜி மட்டுமே நம் இந்திய நாட்டின் சார்பில் மேற்கூறிய பன்னாட்டு கருத்தரங்கில் மாணவப் பிரதிநிதியாக கலந்துகொண்டு, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்க வகையில் அமைந்த அவரின் பேச்சுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் அல்கோர் “க்ரீன் ஃபின் 2020 அங்கீகாரம்” அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க