• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனது கிளையை துவங்கிய சாடின் கிரெடிட்கேர் நிறுவனம்

December 4, 2020 தண்டோரா குழு

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் 99.8 சதவீதம் வரை திரும்பக்கிடைப்பதாகவும், இதனால் இந்த திட்டங்கள் வராக்கடனுக்கு வழிவகுப்பதில்லை என சாடின் கிரெடிட் கேர் தலைமை செயல் அதிகாரி கோவையில் தெரிவித்துள்ளார்

கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு சாடின் கிரெடிட்கேர் என்ற நிறுவனம் கோவையில் தனது கிளையை துவங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.

அப்போது அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தங்கராஜ் கூறுகையில்,

தென்னிந்தியாவில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் எங்களது கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மொத்தம் 1022 கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில், 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கோவையில் துவங்கப்பட்டுள்ள, நிறுவனத்தில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் கடன்கள் வழங்கபடுகிறது. ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்குவதாக கூறிய அவர்,வங்கி சேவையை பயன்படுத்த முடியாத கிராம்புற மக்களுக்கு கடன் உதவிகளை சேர்த்து வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் 99.8 சதவீதம் வரை திரும்பக்கிடைத்து, வராக்கடனுக்கு வழிவகுப்பதில்லை. என கூறிய அவர், நிச்சயம் இந்த கடன் பெண்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என கூறினார்.

மேலும் படிக்க