• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற கூடிய நடைமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம்

November 19, 2020 தண்டோரா குழு

வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற கூடிய நடைமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி அண்மையில் வெளியிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நவம்பர் 21,22 தேதிகள் மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு,மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட முகாம்களில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசணை கூட்டம் கோவை வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் கவுண்டம்பாளையம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க ,மற்றும் தேசிய வாத காங்கிரஸ்,உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ்,

அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் முகவர்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி புரியலாம் எனவும்,மேலும் இதில் முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக பேசினார்.இந்த கூட்டத்தில் கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் குமார், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் சாந்தாமணி,அன்னூர் வட்டாச்சியர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க