• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் அவதி

November 18, 2020 தண்டோரா குழு

கோவையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கோவையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும்.அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் சராசரி அளவுக்கு அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்தது.

இந்த நிலையில் தற்போது கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் நேற்று முன்தினம் பிற்பகல் தொடங்கி மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை வெயில் அடிப்பதும் மழை பெய்வதுமாக இருந்தது.நகரின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அவினாசி ரோடு மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீர் நிரம்பியதால் சிறிதுநேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.

நேற்று மாலை முதல் இரவு வரை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இடையிடையே பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்பட்டனர். ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள கிக்கானி பாலத்திற்கு கீழே உள்ள சாலையிலும் மழைநீர் தேங்கியது. பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தேவாங்கர் பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியதால் சேறும் சகதியாக காட்சியளிக்கிறது. இதனால் சந்தைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் படிக்க