• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் அவதி

November 18, 2020 தண்டோரா குழு

கோவையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கோவையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும்.அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் சராசரி அளவுக்கு அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்தது.

இந்த நிலையில் தற்போது கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் நேற்று முன்தினம் பிற்பகல் தொடங்கி மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை வெயில் அடிப்பதும் மழை பெய்வதுமாக இருந்தது.நகரின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அவினாசி ரோடு மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீர் நிரம்பியதால் சிறிதுநேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.

நேற்று மாலை முதல் இரவு வரை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இடையிடையே பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்பட்டனர். ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள கிக்கானி பாலத்திற்கு கீழே உள்ள சாலையிலும் மழைநீர் தேங்கியது. பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தேவாங்கர் பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியதால் சேறும் சகதியாக காட்சியளிக்கிறது. இதனால் சந்தைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் படிக்க