• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் நகைக்கடையில் தங்க செயின்களை திருடிச் சென்ற கேரள தம்பதி கைது

November 17, 2020 தண்டோரா குழு

கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் நகைக் கடையில் இருந்து தங்க செயின்களை திருடிச்சென்ற கேரள தம்பதியினரை காட்டூர் போலீஸார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுதீஸ் இவரது மனைவி ஷானி. இருவரும் நேற்று முன் தினம் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள தனியார் நகைக்கடைக்கு நகை வாங்குவது போல் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர் செயின் மாடல்களை காட்டியுள்ளார்.அனைத்து மாடல்களைப் பார்த்த அவர்கள் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து வந்து செயினை வாங்கிக்கொள்வதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து ஊழியர்கள் மீண்டும் செயின்களை வைக்கும் போது அதில் இரண்டு செயின்கள் மட்டும் மாயமானது தெரியவந்தது.இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கடை மேலாளாருடன் சேர்ந்த கிராஸ்கட் ரோடு முழுவதும் தம்பதியினரை தேடினர்.அப்போது தம்பதியினர் மற்றும் ஜவுளி கடைக்குள் செல்ல முயன்ற போது அவர்களை பிடித்து விசாரித்த போது செயினை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து சுதீஸ், ஷானி தம்பதியினரை காட்டூர் போலீஸில் ஒப்படைத்தனர்.செயின்களை பறிமுதல் செய்த்து, வழக்கு பதிவுச் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க