• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் நகைக்கடையில் தங்க செயின்களை திருடிச் சென்ற கேரள தம்பதி கைது

November 17, 2020 தண்டோரா குழு

கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் நகைக் கடையில் இருந்து தங்க செயின்களை திருடிச்சென்ற கேரள தம்பதியினரை காட்டூர் போலீஸார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுதீஸ் இவரது மனைவி ஷானி. இருவரும் நேற்று முன் தினம் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள தனியார் நகைக்கடைக்கு நகை வாங்குவது போல் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர் செயின் மாடல்களை காட்டியுள்ளார்.அனைத்து மாடல்களைப் பார்த்த அவர்கள் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து வந்து செயினை வாங்கிக்கொள்வதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து ஊழியர்கள் மீண்டும் செயின்களை வைக்கும் போது அதில் இரண்டு செயின்கள் மட்டும் மாயமானது தெரியவந்தது.இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கடை மேலாளாருடன் சேர்ந்த கிராஸ்கட் ரோடு முழுவதும் தம்பதியினரை தேடினர்.அப்போது தம்பதியினர் மற்றும் ஜவுளி கடைக்குள் செல்ல முயன்ற போது அவர்களை பிடித்து விசாரித்த போது செயினை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து சுதீஸ், ஷானி தம்பதியினரை காட்டூர் போலீஸில் ஒப்படைத்தனர்.செயின்களை பறிமுதல் செய்த்து, வழக்கு பதிவுச் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க