• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும்

November 7, 2020 தண்டோரா குழு

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கோவையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் நீதி மையத்தை சேர்ந்த தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கே.என்.ஜி.காலனியில் சுரபி பில்டு மார்ட் எதிர்புறம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

கவுண்டம்பாளையம் தொகுதி தலைவர் தம்புராஜ் மற்றும் செய்தி மற்றும் ஊடக பிரிவின் மாநில துணை செயலாளர் சுரபி பங்கஜ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேக் வழங்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன்,

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தலில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்த போவதாக அவர் தெரிவித்தார்.தொடர்ந்து ஏழை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து சுப்ரமணியம்பாளையம்,கவுண்டம்பாளையம், மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.விழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 66 கொடிக்கம்பங்கள் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.

மேலும் படிக்க