November 7, 2020
தண்டோரா குழு
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கோவையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் நீதி மையத்தை சேர்ந்த தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கே.என்.ஜி.காலனியில் சுரபி பில்டு மார்ட் எதிர்புறம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதி தலைவர் தம்புராஜ் மற்றும் செய்தி மற்றும் ஊடக பிரிவின் மாநில துணை செயலாளர் சுரபி பங்கஜ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேக் வழங்கப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன்,
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தலில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்த போவதாக அவர் தெரிவித்தார்.தொடர்ந்து ஏழை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து சுப்ரமணியம்பாளையம்,கவுண்டம்பாளையம், மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.விழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 66 கொடிக்கம்பங்கள் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.