• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

November 7, 2020 தண்டோரா குழு

ராஜவீதி பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத “1” லட்சத்தி “70” ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்று வருவதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு தீயணைப்பு துறை அதிகாரி பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி ஒருவரை கைது செய்தனர்.உரிமம் வழங்க 5000 ரூபாய் பெற்ற அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கோவை ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் சார்பதிவாளர் கார்த்திகேயன் அறை மற்றும் அலுவலக வளாகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது பதிவாளர் அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள் மற்றும் பத்திர பதிவிற்கு வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் கணக்கில் வராத “1” லட்சத்தி “70” ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க