• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

November 7, 2020 தண்டோரா குழு

ராஜவீதி பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத “1” லட்சத்தி “70” ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்று வருவதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு தீயணைப்பு துறை அதிகாரி பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி ஒருவரை கைது செய்தனர்.உரிமம் வழங்க 5000 ரூபாய் பெற்ற அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கோவை ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் சார்பதிவாளர் கார்த்திகேயன் அறை மற்றும் அலுவலக வளாகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது பதிவாளர் அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள் மற்றும் பத்திர பதிவிற்கு வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் கணக்கில் வராத “1” லட்சத்தி “70” ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க