• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கான வித்தியாரம்பம் நிகழ்ச்சி

October 26, 2020 தண்டோரா குழு

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் இன்று விஜயதசமி என்றும் வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.

இத்திருநாளில் வித்தியாரம்பம் செய்தல் ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரபிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.கோவை சித்தாபுதூர் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆயூத பூஜையை தொடர்ந்து வரும் இந்த விஜயதசமி பண்டிகை கொரணா கட்டுப்பாட்டின் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்று கோவில்களில் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்க பச்சரிசியில் அ, ஆ, இ என்று எழுத தொடங்குவர். அதன் பின்னர் இன்று நடக்கும் பள்ளி சேர்க்கையில் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்குவார்கள். இன்று குழந்தைகள் விஜயதசமியை முன்னிட்டு கோவிலிக்கு சென்று பச்சரிசியில் முதன் முறையாக எழுத ஆரம்பித்து பின் பள்ளியில் சேர்ந்தால் சிறந்து விளங்குவர் என்பது குழந்தைகளின் பெற்றோர் நம்பிக்கை.

மேலும் படிக்க