• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சக தோழரின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு சென்ற பார்வையற்றவர்கள்

October 22, 2020 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்துவந்த பரமேஸ்வரன் என்பவர் இரண்டு கண் பார்வையற்ற நபர் அவருக்கு வயது 75. இவரது சொந்த ஊர் சென்னை இவருடைய அண்ணன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு கோயம்புத்தூரில் வேலை செய்து ஜீவனம்சம் செய்ய வந்துள்ளார்.

பார்வையற்றோர் சங்க தலைவர் சதாசிவம் என்பவர் ஊதுபத்தி வியாபாரம் செய்யும் வேலையை ஏற்படுத்திக் கொடுத்து தனி அறை வாடகைக்கு எடுத்து தங்க வைத்து தொழில் ஏற்பாடு செய்து கொடுத்தார் கடந்த 15 ஆண்டுகளாக நல்லமுறையில் இருந்தார். இரண்டு தினங்களுக்கு முன் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். அவரது இறப்பை அவருடைய சகோதரர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

அவர் தாங்கள் பார்வையற்ற சங்கத்தின் மூலமாகவும் ஆத்மா அறக்கட்டளை மூலமாகவும் நல்லடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காவல்துறை உதவியுடன் இந்த பார்வையற்ற நபரை ஆத்மா அறக்கட்டளை வாகனத்தில் ஏற்றிச் சென்று மாநகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பார்வையற்ற சங்கத்தின் தலைவர் சதாசிவம் தலைமையில் சுமார் 15 பார்வையற்ற நபர்கள் அவருடன் பழகிய நபர்கள் வந்தனர். அவர்கள் முன்னிலையில் பரமேஸ்வரனுக்கு ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இறுதிச் சடங்குகள் செய்தார்.

மேலும் படிக்க