• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குறைந்த எடையிலான செயற்கை கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்

October 16, 2020 தண்டோரா குழு

மறைந்த அப்துல் கலாம் அறிமுகம் செய்து வைத்த குறைந்த எடையிலான செயற்கை கால்களை அவரது நினைவாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

இந்திய நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியாகவும்,நாட்டின் ஜனாதிபதியாகவும் தனக்கென தனி முத்திரை பதித்து நாட்டுமக்களின் அன்பை பெற்றவர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.. இந்நிலையில் அவரது பிறந்த தினத்தை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில் அவரை நினைவு கூறும் விதமாக கோவை கவுண்டம்பாளையம் ஆறாவது வார்டு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.

அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலரான சோனாலி பிரதீப் தலைமையில் நடைபெற்ற இதில், குறிப்பாக அப்துல் கலாம் அறிமுகம் செய்து வைத்த குறைந்த எடையிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில்,

அப்துல் கலாமின் நினைவாக தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை கவுரவிக்கும் விதமாக இது போன்று வழங்குவதாகவும் மேலும், இந்த மாதம் முழுவதும் பல்வேறு வகையிலான பயனளிக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிரதீப் ஜோஸ் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க