• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குளியலறையில் பெண் குளிப்பதை படம்பிடிக்க முயன்ற நபர் கைது

October 16, 2020 தண்டோரா குழு

குளியலறையில் பெண் குளிப்பதை செல்போன் வாயிலாக படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் போடும் நபரை போலிசார் கைது செய்தனர்.

கோவையில் பொண்ணையராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண் குளிக்கும் போது செல்போன் மூலம் படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் போட வந்த நபரை வெரைட்டி ஹால் போலிசர் கைது செய்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 40 வயதுடைய பெண் வீட்டின் வெளியே உள்ள குளியளறையில் குளித்துவிட்டு கதவின் மேல் போட்டுயிருந்த துணியை எடுத்துவிட்டு பார்க்கும் போது யாரோ செல்போனில் படம் பிடிப்பது போன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து கூச்சலிட்டதுடன் அந்த நபர் அங்கியிருந்து தப்பித்துள்ளார், குளியலறை விட்டு வெளியே வந்து பார்த்த போது சிலிண்டர் போடும் நபர் அவசர அவசரமாக வண்டியை எடுத்துவிட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர் அளித்த புகாரை அடுத்து போலிசார் விசாரணை நடத்தியதில் சிலிண்டர் வைக்க செல்லும் போது வீட்டில் யாருமில்லததை உணர்ந்து கொண்டு செல்போன் வாயிலாக படம் பிடிக்க முயன்றதாக கூறியுள்ளான். இதையடுத்து போலிசார் செல்வராஜை கைது செய்தனர்.

மேலும் படிக்க