• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மோடியின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 70 மரக்கன்றுகள் நடும் விழா

September 18, 2020 தண்டோரா குழு

கோவையில் நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவினர் சார்பாக எழுபது நாட்டு அத்திமர கன்றுகள் நடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்தநாளை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகள் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்ட பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு சார்பாக மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக எழுபது நாட்டு அத்தி மரக்கன்றுகள் நடும் விழா கோவை வ.ஊ.சி மைதான வளாகத்தில் நடைபெற்றது. ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவின் மாவட்ட செயலாளர்கள் அபினவ்,மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.நந்த குமார்,மாவட்ட பொது செயலாளர் தாமு ஜி மற்றும் பிரிவின் பரிபாரி திருமதி வத்சலா ஆகியோர் கலந்து கொண்டு நாட்டு அத்தி மர கன்றுகளை நட்டனர். இதில் பா.ஜ.க ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவின் குறிச்சி மண்டல கணேஷ்,ஆலாந்துறை மண்டல சிவகுமார்,பேரூர் மண்டல சுரேஷ்,காளப்பட்டி ரவி,துடியலூர் நாகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க