• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

September 17, 2020 தண்டோரா குழு

கோவையில் கோவை நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கோவையில் #COVID19 பாதிப்பை தடுக்கும் நோக்கில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்.இதில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மேலும், உடனடியாக நோய் பாதிக்கப்பட்டோரின் தொடர்பு விவரங்களை சுகாதாரத் துறை & கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.இதற்கு தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க