September 16, 2020
தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை காட்டுயானை வழிமறித்தன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன குறிப்பாக யானை காட்டெருமை புலி கரடி சிறுத்தை மான் போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மூன்று காட்டு யானைகள் கோத்தகிரி முதலாவது கொண்டை ஊசி வளைவில் ஒய்யாரமாக சாலையில் உள்ள மரக் கிளைகளை உடைத்து பசியாற்றி கொண்டது இதனால் அந்த வழியில் சென்ற வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.