• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை

September 16, 2020 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை காட்டுயானை வழிமறித்தன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன குறிப்பாக யானை காட்டெருமை புலி கரடி சிறுத்தை மான் போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மூன்று காட்டு யானைகள் கோத்தகிரி முதலாவது கொண்டை ஊசி வளைவில் ஒய்யாரமாக சாலையில் உள்ள மரக் கிளைகளை உடைத்து பசியாற்றி கொண்டது இதனால் அந்த வழியில் சென்ற வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க