• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய மாநில அரசை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

September 12, 2020 தண்டோரா குழு

நாளை தமிழகத்தில் மருத்துவர்களுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரையை சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்க்கா என்ற மாணவி இன்று கடிதம் எழுதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தொடர்ந்து நீட் தேர்வினால் மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யும் சம்பவம் நடந்து வருவதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித நேய மக்கள் கட்சியினர் தமிழகத்தில் நீட்டை நடத்த கூடாது,மாணவர்களை காப்பாற்று,உயிரை பரிக்காதே என பதாகைகள் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் படிக்க