• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா இல்லாத கோவையை உருவாக்குவோம் – எஸ்.பி.வேலுமணி

September 12, 2020 தண்டோரா குழு

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா இல்லா மாநகராக கோவையை உருவாக்க தன்னார்வலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்,

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் #COVID19 தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ‘பொதுநலம் பேணு’ எனும் உயர்ந்த பண்போடு செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை மாநகரை #COVID19 நோய்த்தொற்று இல்லா மாநகராக மாற்றும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் 96269 01753, 77085 92333 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கொரோனாவுக்கு எதிரான கோவை மாநகராட்சியின் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க