• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முக கவசமின்றி செல்வோர்க்கு 100ரூபாய் அபராதம் விதிக்கும் பணி தீவிரம்

September 8, 2020 தண்டோரா குழு

கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் முக கவசமின்றி செல்வோர்க்கு போலீசார் உதவியுடன் மாநகராட்சியினர் 100ரூபாய் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பிறப்பித்து உள்ளார். வாயையும்,மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்கள்,பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு, பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து கோவையில்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த காந்திபுரம் பகுதியில் முக கவசம் அணியாமல் நடந்து செல்வோர்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் முக கவசம் இன்றி செல்வோரை காட்டூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் மாநகராட்சியினர் தனி நபர்க்கு 100ரூபாய் என்று அபராதம் விதித்தனர்.மேலும் முக கவசமின்றி வருவோருக்கு போலீசார் முக கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதே போல் கோவையின் பல்வேறு பகுதியில் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க