• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொலையில் முடிந்த ஊறுகாய் சண்டை

September 8, 2020 தண்டோரா குழு

கோவையில் உறுகாய்க்காக இளைஞர் நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனங்களில் பனியாற்று நான்கு இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட வீட்டு சென்றவுடன் இருவர் முதலில் உணவு உட்கொண்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர் சித்து குமார் என்ற 17 வயது இளைஞரும், பிரஜங்கி குமார் என்ற 20 வயது இளைஞரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது குழம்பு தீர்ந்ததால் சித்து ஊறுகாய் கேட்டுள்ளார். ஆனால் ஊறுகாய் தர மறுத்த பிரஜங்கி குமார் ஊறுகாயை ஒளித்து வைத்துள்ளார். பின்னர் இருவரும் சண்டையிட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் சண்டை உச்சகட்டத்தை எட்ட சண்டை கை கலப்பில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரஜங்கி குமார் சித்து குமாரை கழுத்தை நெறித்தும் எட்டி உதைத்தும் உள்ளார். அடித்துவிட்டு பிரஜங்கி குமார் வெளியேறிய நிலையில் மயக்கமடைந்த சித்துகுமார் உயிரிழந்துவிட்டார். மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக பீளமேடு போலிஸார் பிரஜங்கி குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஊறுகாய்க்காக தன் அறை சக நண்பரை கொன்ற வட மாநில இளைஞரால் அப்பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க