• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

September 8, 2020 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசும் மாநகராட்சி நிர்வாகமும் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முழக்கங்களை எழுப்பினர்.
உள்ளூர் பணியிடமாற்றம்,மினி மையப் பணியாளர்களில் 3 ஆண்டு முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உதவியாளர்களுக்கு 10 வருடம் படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருப்பதாகவும்,தற்போது பணியிட மாறுதல் நேரடி நியமனம் ஆக்கப்படுவதால் பணியாளர்களின் நிலை பாதிக்கப்படுகிறது என்றும் எனவே பணி இடமாற்றம் பதவி உயர்வு ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க