• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டம்

September 8, 2020 தண்டோரா குழு

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தி.மு.க இளைஞரணியினர் கோசங்கள் எழுப்பினர்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, தி.மு.க.இளைஞரணி-மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக,கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் தி.மு.க இளைஞரணி கோவை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக இளைஞரணி சார்பில் நூதன முறையில் நடைபெற்றது. இதில் மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியும் மேலும் , நீட் தேர்வை ரத்து செய்ய கோரி புறா காலில் கோரிக்கை மனுவை கட்டி மத்திய அரசுக்கு அனுப்புவது போல பறக்க விட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரிய கடைவீதி பகுதி மாணவரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் PJ யாசர்,CMS இஸ்மாயில்,லேனா தன்ஜில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க