• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கு தளர்வான போதும் வெறிச்சோடிய வணிக வளாகங்கள்

September 6, 2020 தண்டோரா குழு

கோவையில் முழு ஊரடங்கு தளர்வான போதும் வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் கொரணா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழக்கம்போல் கடைகள் செயல்படும் என ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு.

இந்த சூழ்நிலையில் முடங்கிக் கிடந்த கோவை வணிக வளாகங்கள், கடைகள், சாலைகள் ஞாயிற்றுக் கிழமையான இன்றும் திறக்கப்பட்டன. ஆனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, காந்திபுரம் குறுக்குசாலை, 100 அடி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் 60 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. அவ்வாறு திறக்கப்பட்ட கடைகளிலும் பெருமளவிலான கூட்டத்தைக் காணமுடியவில்லை.கையில் காசு இல்லாததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கோவை பொதுமக்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடை வீதிகளுக்கு வரவில்லை. இதனால் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

காலை முதல் துணிக்கடைகள் தங்க நகைக்கடைகள் இயந்திர உதிரி பாகங்களின் மின்னணு சார்ந்த எலக்ட்ரானிக் விற்பனை கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு இருந்தபோதும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காணப்பட்ட கூட்டத்தினரை காண முடியவில்லை. அவ்வப்போது வரும் ஒருசில வாடிக்கையாளர்களும் பெருமளவிலான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் நாளுக்கு நாள் பெருகி வரும்கொரணாதொற்று காரணமாகவும் பொது மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.

மேலும் படிக்க