• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரடங்கு தளர்வான போதும் வெறிச்சோடிய வணிக வளாகங்கள்

September 6, 2020 தண்டோரா குழு

கோவையில் முழு ஊரடங்கு தளர்வான போதும் வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் கொரணா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழக்கம்போல் கடைகள் செயல்படும் என ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு.

இந்த சூழ்நிலையில் முடங்கிக் கிடந்த கோவை வணிக வளாகங்கள், கடைகள், சாலைகள் ஞாயிற்றுக் கிழமையான இன்றும் திறக்கப்பட்டன. ஆனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, காந்திபுரம் குறுக்குசாலை, 100 அடி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் 60 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. அவ்வாறு திறக்கப்பட்ட கடைகளிலும் பெருமளவிலான கூட்டத்தைக் காணமுடியவில்லை.கையில் காசு இல்லாததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கோவை பொதுமக்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடை வீதிகளுக்கு வரவில்லை. இதனால் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

காலை முதல் துணிக்கடைகள் தங்க நகைக்கடைகள் இயந்திர உதிரி பாகங்களின் மின்னணு சார்ந்த எலக்ட்ரானிக் விற்பனை கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு இருந்தபோதும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காணப்பட்ட கூட்டத்தினரை காண முடியவில்லை. அவ்வப்போது வரும் ஒருசில வாடிக்கையாளர்களும் பெருமளவிலான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் நாளுக்கு நாள் பெருகி வரும்கொரணாதொற்று காரணமாகவும் பொது மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.

மேலும் படிக்க