• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்களோடு ஆசிரியர் தினகொண்டாட்டம்

September 5, 2020 தண்டோரா குழு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முன்னாள் மாணவர்களோடு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

மேனாள் குடியரசத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்தநாளான அன்று அவருடைய திருவுருவப்படத்திற்கு ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர். பி.எல்.சிவக்குமார் மற்றும் துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா ஆகியோருக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேரா.முனைவர் ஆர்.பிரபு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்று இன்று அதேக ல்லூரியிலும், பிற கல்லூரிகளிலும் பேராசிரியர்களாகப் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் இணைந்து தங்களது ஆகிரியர்களுக்கு வாழ்த்துக்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். மாணவர்களாக இருந்த போது தங்களுக்கு புத்தகங்களை போதித்ததை நினைவூட்டும் வகையில் பூங்கொத்துகளோடு புத்தகங்களையும் நினைவுப்பரிசாக வழங்கி தங்கள் ஆசிரியர்களைஆச்சரியத்தில்ஆழ்த்தினர்இம்முன்னாள்மாணவர்கள்.

மேலும்,இணையவழியாகவும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம்இருந்தனர். கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவர் முனைவர் விஜயகுமார், வணிகவியல் புலமுதன்மையர் சண்முகானந்த வடிவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க