• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்களோடு ஆசிரியர் தினகொண்டாட்டம்

September 5, 2020 தண்டோரா குழு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முன்னாள் மாணவர்களோடு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

மேனாள் குடியரசத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்தநாளான அன்று அவருடைய திருவுருவப்படத்திற்கு ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர். பி.எல்.சிவக்குமார் மற்றும் துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா ஆகியோருக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேரா.முனைவர் ஆர்.பிரபு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்று இன்று அதேக ல்லூரியிலும், பிற கல்லூரிகளிலும் பேராசிரியர்களாகப் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் இணைந்து தங்களது ஆகிரியர்களுக்கு வாழ்த்துக்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். மாணவர்களாக இருந்த போது தங்களுக்கு புத்தகங்களை போதித்ததை நினைவூட்டும் வகையில் பூங்கொத்துகளோடு புத்தகங்களையும் நினைவுப்பரிசாக வழங்கி தங்கள் ஆசிரியர்களைஆச்சரியத்தில்ஆழ்த்தினர்இம்முன்னாள்மாணவர்கள்.

மேலும்,இணையவழியாகவும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம்இருந்தனர். கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவர் முனைவர் விஜயகுமார், வணிகவியல் புலமுதன்மையர் சண்முகானந்த வடிவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க