• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

July 14, 2020 தண்டோரா குழு

கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கேரள போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையிலிருந்து கேரளாவிற்கு வாளையார் வழியாக செல்லும் வாகனங்களை கேரள மாநில போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் ஹவாலா பணம் 2 கோடி ரூபாய் அளவிற்கு சிக்கியுள்ளதை அடுத்து கேரள போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு வகையான பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் இருந்து பனியன் கழிவுகளை ஏற்றி சென்ற பிக் அப் வாகனம் ஒன்றை கேரள போலீசார் வாளையார் சோதனை சாவடியில் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது அதில் இருந்த மூட்டைகளில் சில சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது பனியன் கழிவுகளுக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்,பாக்கெட் பாக்கெட்டாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாகன ஓட்டுனரான கோவையை சேர்ந்த ஜைன்னுலாபுதீன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமர் 15 லட்சம் ரூபாய் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க