• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆன்லைன் வகுப்பை தடை செய்ய கோரி ஆர்பாட்டம்

June 15, 2020 தண்டோரா குழு

கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பாக
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா பிரச்சனையின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் எங்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இது அனைவருக்கும் சரியானதாக படவில்லை. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் எட்டாக் கணியாகவே உள்ளது.

இந்த நிலையில் கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் நடைபெறும் கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழங்கினர். அதே போல 2020-21 கல்வி ஆண்டில் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 25% இடம் ஏழை எளிய மாணவர்களுக்கு சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதே போல ஆன் லைன் வகுப்புகள் வாயிலாக இணைய பயன்பாடு சிறார்கள் வாழ்கையில் மிகப்பெரிய இன்னலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.எனவே பள்ளி சிறார்களுக்கு நடத்தப்படும் ஆன் லைன் வகுப்பை தடை செய்ய வேண்டும் என ஆர்பாட்டக்கார்கள் கேட்டுக்கொணடனர்.

மேலும் படிக்க