• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி விற்பனை – ஒருவர் கைது

June 15, 2020 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி கட்டுகளை கடைகளுக்கு விற்பனை செய்த நபரைதுடியலூர் போலிசார் கைது செய்தனர்.

கோவையில் பிரபல பீடி கம்பெனியான 10ம் நம்பர் பீடி பெயரில் போலி பீடி கட்டுகள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து,நேற்று மாலை கவுண்டம்பாளையம் பகுதியில் பீடி கம்பெனி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்த போது அங்கு போலி பீடி கட்டுகளை விற்பனை செய்ய வந்த நபரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து அவரிடம் இருந்த போலி பீடி கட்டுகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

பீடி கம்பெனியின் புகாரின் அடிப்படையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தென்காசியை சேர்ந்த பிச்சையா என்கின்ற சூர்யா என்பதும் அங்கு கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்ததால் அங்கிருந்து பிரபல கம்பெனி பெயரில் தயாரிக்கப்படும் போலி பீடி கட்டுக்களை கொண்டு வந்து கோவையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவரை கைது செய்த துடியலூர் போலீஸார் அவரிடம் இருந்து 100 போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க