June 2, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,036. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 536 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 13,706 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆம் நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.