• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதுப் பொலியுடன் தயாரான பேருந்து நிலையங்கள்

June 1, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தடுப்பு ஊரடங்கால் மூடப்பட்ட பேருந்து நிலையங்கள், வண்ணங்கள் பூசப்பட்டு புதிய பொலியுடன் செயல்பட துவங்கியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.இதனால் கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

இந்நிலையில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டது.தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து மூடப்பட்ட காந்திபுரம், உக்கடம், உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் அனைத்து பேருந்து நிலையங்களும் வண்ண பெய்ண்டுகள் பூசப்பட்டது.மேலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும் சமூக இடைவெளி கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளை காய்ச்சல் பறிசோதனை செய்யும் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதே போல் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.

மேலும் படிக்க