• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுவாணி நீர் கிடைப்பதில் சிக்கலா ? – கோவை மாநகராட்சி அறிக்கை

May 30, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவீட்டில் எவ்விதத்திலும் பாதிக்காது என கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்
வெளியிட்ட அறிக்கையில்,

சிறுவாணி அணைப்பகுதியில் கேரளா அரசால் தடை ஏற்படுத்தப்படும் என்ற வகையில் பொதுமக்களுக்கு சிறுவாணி குடிநீர் கிடைப்பதில்,சிரமம் ஏற்படும் என கடந்த சில நாட்களாக பத்திரிக்கைளிலும், ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன.ஆனால், ஒவ்வொரு கோடைக் காலங்களிலும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கிடைக்கப்பெற்று வரும் குடிநீர் அளவே தற்போதும் பெறப்பட்டு வருகிறது.
இந்த அளவானது வருகிற ஜீன் மாதம் இறுதி வரையிலும் எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கப்பெறும்.

மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை கிடைக்கப் பெறவுள்ளதால் கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவீட்டில் எவ்விதத்திலும் பாதிக்காது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க