• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

6 வது நாளாக எம்.ஆர்.பி. செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணி செய்து போராட்டம்

May 30, 2020 தண்டோரா குழு

தொடர்ந்து 6 வது நாளாக எம்.ஆர்.பி.செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணி செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணி செய்யும் செவிலியர்கள். தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி கடந்த 25 ம்தேதி முதல் தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்கின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக எம்.ஆர்.பி.செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க