May 30, 2020
தண்டோரா குழு
தொடர்ந்து 6 வது நாளாக எம்.ஆர்.பி.செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணி செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணி செய்யும் செவிலியர்கள். தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி கடந்த 25 ம்தேதி முதல் தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்கின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக எம்.ஆர்.பி.செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.