May 29, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர் பகுதியில் ஒரே நாளில் போக்குவரத்து விதி மீறல் 123 வழக்கு பதிவு செய்யப்பட்டன.இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இதுவரை 18 ஆயிரத்து 526 வழக்குகள் பதிவானது. 21 ஆயிரத்து 146 பேர் கைது செய்யப்பட்டனர். 18,519 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறை மீறல் தொடர்பாக 82 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது. தொற்றுநோய் பரவும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது. முறையான அனுமதி பெற்று மாவட்டம் விட்டு மாவட்டம் வாகனங்களை இயக்க வேண்டும். வெளி மாநிலம் செல்ல முறையாக பெற்றிருக்க வேண்டும்.அனுமதியின்றி அத்துமீறி பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது குறிப்பாக நோய் பரவிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் கோவை மாவட்ட எல்லைக்குள் நுழைய கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளனர்.