May 26, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 646 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில், தமிழகத்தில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 592. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 54. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மேலும் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 9342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.