May 23, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்,
மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 24 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து திரும்பிய 6 பேர் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில்
624 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்தததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 7,915 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது.