• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண் பயிற்சி மருத்துவரை குடியிருப்பு பகுதியில் அனுமதிக்க மறுத்த குடியிருப்புவாசிகள்

May 19, 2020 தண்டோரா குழு

மகாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிந்து கோவை திரும்பிய பெண் பயிற்சி மருத்துவரை அவரது குடியிருப்பு பகுதியில் சக குடியிருப்புவாசிகள் அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள துலாக் வெங்கடசாமி வீதியில் வசித்து வருபவர்கள் நடராஜன் (54) மற்றும் பத்மபிரியா (45) தம்பதியினர். உணவகம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் வாசுகி (24) கோவை நவ கரையில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை மருத்துவம் படித்துவிட்டு, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதியில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தனது சொந்த ஊரான கோவை திரும்ப முடிவெடுத்த வாசுகி பூனேவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வெளியானதையடுத்து கார் மூலம் கோவை திரும்பினார்.

கோவை வந்த இயற்கை மருத்துவர் வாசுகி கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனையிலும் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இயற்கை மருத்துவர் வாசுகி பீளமேட்டில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல முயன்றபோது, சக குடியிருப்புவாசிகள் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் அவரை அனுமதிக்க மறுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அப்பகுதி வாசிகளை சமாதானம் செய்தனர்.

இதனை அடுத்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்த மருத்துவர் வாசுகி, உதவிக்காக அவரது தம்பியை மட்டும் உடன் தங்க வைத்துக் கொண்டு, பெற்றோர் இருவரையும் அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க