• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நேற்று பெய்த கன மழையில் வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

May 18, 2020 தண்டோரா குழு

கோவையில் நேற்று பெய்த கன மழையில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

கோவையில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக, கோவை டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து சிக்னல் வேரோடு சாய்ந்தது. வடகோவை மேம்பாலத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.
குளக்கரையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலிகள் சாய்ந்து பெயர்ந்து விழுந்தகுளக்கரையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலிகளும் பெயர்ந்து விழுந்தது.

இச்சம்பவங்களினால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில்,தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கரும்புக்கடை,முத்து காலனி மற்றும் சேரன் நகர் பகுதிகளில் தென்னை மரங்கள் விழுந்து வீடுகள் இடிந்தது, இதேபோல் வீசிய பலத்த காற்றுக்கு ஓடுகள் பெயர்ந்து வீடுகள் சேதம் அடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பை சீர் செய்ய கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க