• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டியல் மற்றும் தலித் இன மக்களின் மீது தாக்குதல் நடத்தும் ஆதிக்க நபர்களை கண்டித்து போராட்டம்

May 13, 2020 தண்டோரா குழு

ஊடங்கு அமலில் உள்ள நிலையிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டியல், தலீத் இன மக்கள் மீது ஆதிக்கவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி போன்ற ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலீத் பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆதிக்க வாதிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் விழுப்புரத்தில் மாணவி ஒருவரை எறித்த குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

இது குறித்து பேசிய திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி,

ஊரடங்கு பிறபிக்கப்பட்ட 40 நாட்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டியல் மற்றும் தலீத் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் சாதி ரீதியான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆதிக்க சாதியினர் பட்டியல் தலீத் மக்கள் மீது 10க்கும் மேற்பட்ட கொலைகள், 12க்கும் மேற்பட்ட தனி நபர் தாக்குதல்கள், 5க்கும் மேற்பட்ட கும்பல் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர். இது கரோனா வைரஸை விட மிக கொடியது, மத்திய அரசு தமிழ்நாட்டை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க வேண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீ மாணவியின் வழக்கை காலம் தாழ்த்தாமல் 90 நாட்களுக்குள் முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க